Tamil News
Home செய்திகள் அலரிமாளிகையில் அவசர கூட்டம்;பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

அலரிமாளிகையில் அவசர கூட்டம்;பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் அவசர கூட்டம் ஒன்றுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை 4 ஆம் திகதி கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அரசாங்க உயர் வட்டாரங்கள் இன்று காலை தெரிவித்தன.

திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் இந்தக் கூட்டம் இடம்பெறும் எனவும், நாட்டின் தற்போதைய நிலைமைகளையிட்டு ஆராய்வதற்காகவே இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் இன்று காலை முன்னாள் எம்.பி.க்களுக்கு பிரதமரின் அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை அவசரமாகக் கூட்ட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கும் பின்னணியிலேயே இந்தக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது

Exit mobile version