Tamil News
Home செய்திகள் அர்த்தமுள்ள பொறுப்புக் கூறல் அவசியம்: வலியுறுத்துகின்றார் கனடா பிரதமர்

அர்த்தமுள்ள பொறுப்புக் கூறல் அவசியம்: வலியுறுத்துகின்றார் கனடா பிரதமர்

இலங்கை அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயல்முறையை பின்பற்றவேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பதினொரு வருடங்களாவதை குறிக்குமுகமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் மோதல் முடிவிற்கு வந்து பதினொரு வருடங்களாவதை நாங்கள் நினைவுகூறும் வேளையில் எனது சிந்தனைகள் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய குடும்பங்கள் அவர்களுடைய நேசத்திற்குரியவர்கள் குறித்ததாகவே உள்ளன.

இது முள்ளிவாய்க்காலின் இறுதி கட்டப்போர், அதன்போது இழக்கப்பட்ட உயிர்கள் உட்பட 26 வருட யுத்தம் குறித்து சிந்திப்பதற்கான தருணமாகும். மேலும் காயமடைந்தவர்கள், காணாமல்போனவர்கள்,வீடுகள் சமூகங்களில் இருந்து இடம்பெயரநிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் குறித்தும் நினைவுகூறவேண்டும்.

கடந்த 11 வருடங்களில் நான் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல கனடா பிரஜைகளை சந்தித்துள்ளேன்.கணக்கிட முடியாத இழப்புகள்,மிகப்பெரிய துன்பம்,துன்பத்திலிருந்து மீள்எழும் தொடர்ச்சியான திறன் என்பன நிரந்தர சமாதானம் மற்றும் நல்லணிக்கத்திற்காக தொடர்ந்து பாடுபடவேண்டியதன் அவசியத்தை நினைவுபடுத்தியுள்ளன.

கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முக்கியம், அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் செயல்முறையை பின்பற்றுமாறு இலங்கைக்கான எனது வேண்டுகோளை நான் மீண்டும் விடுக்கின்றேன்.

கனடா இலங்கை அரசாங்கத்திற்கும் நீதி நல்லிணக்கம் அனைவரையும் உள்வாங்குவதல் ஆகியவற்றினை நோக்கி பணியாற்றுபவர்களிற்கும் தனது ஆதரவை தொடர்ந்தும் வழங்கும்.இவை அனைத்தும் இலங்கையில் நீண்ட கால சமாதானம் மற்றும் செழிப்பினை உறுதிசெய்யக்கூடிய விடயங்கள்என தெரிவித்துள்ளார்.

Exit mobile version