‘அரசே இன அடக்குமுறையை நிறுத்து’ – ஆளுநா் அலுவலகம் முன்பாக போராட்டம்

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய தீா்த்தகேணிக்கு அருகில் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டமையை கண்டித்து வடக்கு மாகாண ஆளுநா் அலுவலகம் முன்பாக கவனயீா்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வட.கிழக்கு சிவில் அமைப்புக்களும் பொதுமக்களும் இணைந்து நேற்று காலை 10 மணியளவில் இந்த கவனயீா்ப்பு போராட்டத்தினை நடத்தியிருந்தனா்.

இதன்போது ‘அரசே இன அடக்குமுறையை நிறுத்து’, ‘அரசே இனங்களுக்கிடையில் பாரபட்சம் காட்டாதே’ ‘நீதி ஆள்கிறதா? அநீதி ஆள்கிறதா?’ போன்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு கவனயீா்ப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனா்.