அரசியல் கைதிகள் என யாரும் இல்லை -மகிந்த ராஜபக்சே

அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நடாளுமன்ற விவாதத்தில் சிறைகளில் எத்தனை கைதிகள் இருக்கின்றனர் என எழுப்பிய  கேள்விக்கு, இவ்வாறு மகிந்தராஜ பக்சே  பதில் அளித்துள்ளார்.

மேலும் இலங்கை தண்டனைக்கோவைச்சட்டம் அல்லது நாட்டில் செயற்பட்டு வரும் வேறு எந்த சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் கைதிகள் அல்லது அரசியல் கைதிகள் என யாரும்  சிறைகளில் இல்லை எனத் பிரதமர் மகிந்த  தெரிவித்துளளார்.