Home செய்திகள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி வடகிழக்கின் பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனை வாரம் ஆரம்பம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி வடகிழக்கின் பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனை வாரம் ஆரம்பம்

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பிரார்த்தனை வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் இணைந்து குறித்த பிரார்த்தனை வாரத்தினை ஆரம்பித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் நிகழ்வானது இன்று மாலை மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் அருள்மிகு ஸ்ரீஆலையடிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.

IMG 8113 அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி வடகிழக்கின் பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனை வாரம் ஆரம்பம்

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்கள்பபு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் பிரதிநிதியாக ஆர்.பாரதிதாசன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கறுப்பு மற்றும் மஞ்சலி நிற பட்டிகள் அணிவிக்கப்பட்டு ஆலய வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின்போது தமிழ் அரசியல் கைதிகள் வருகின்ற பொங்கல் தினத்திலாவது விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, வழிபாட்டு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

 

இச்செயற்பாடானது தொடர்ச்சியாக எதிர்வரும் 14ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Exit mobile version