Tamil News
Home செய்திகள் அரசாங்கத்தின் எதேச்சதிகார செயற்பாடே  யாழ் மாநகர  முதல்வர் கைது – தி.சரவணவன்

அரசாங்கத்தின் எதேச்சதிகார செயற்பாடே  யாழ் மாநகர  முதல்வர் கைது – தி.சரவணவன்

யாழ் மாநகரசபையின் முதல்வர் கைதானது அரசாங்கத்தின் எதேச்சதிகார செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணவன் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மாநகரசபை முதல்வர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர முதல்வர் கைதானது தமிழ் மக்களுக்கு ஆபத்தான சூழ்நிலையொன்று உருவாகிக்கொண்டிருப்பதை காட்டுவதாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநகரசபை கட்டளைச் சட்டத்தின் கீழ் மாநகர காவல் அணியை உருவாக்க முடியும் எனவும் மட்டக்களப்பு மாநகரசiபில் 2018ஆம் ஆண்டு இவ்வாறான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு காவல்துறை திணைக்களம் ஊடாக பத்து பேர் கொண்ட காவல் அணியொன்று கோரப்பட்டிருந்ததாகவும் அது தொடர்பான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகரசபையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீருடையானது பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version