அமெரிக்க கடற்படை – சிறீலங்கா கடற்படை கிழக்கில் சந்திப்பு

அமெரிக்க கடற்படையின் பசுபிக் பிராந்திய பிரிவைச் சேர்ந்த சிறப்புப்புப் படை அதிகாரிகளுக்கும் சிறீலங்கா கடற்படையின் கிழக்கு பிராந்திய அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று கிழக்கு பிராந்திய கடற்படை தளத்தில் கடந்த புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

சிறீலங்கா கடற்படையின் பிரதி அதிகாரி ஜெயந்த குலரத்னாவை சந்தித்த இந்த குழுவில் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி இஸ்ரேல் றோசா பங்கு பற்றியதுடன். சிறீலங்காத் தரப்பில் சிறீலங்கா கடற்படையின் சிறப்பு படையணியின் இந்திகா விஜயரத்தினா, மற்றும் சிறப்பு படையணியின் முதலாவது பற்றலியன் கட்டளை அதிகாரி காயங்கா கரியவாசம் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

சிறீலங்கா கடற்படையினருக்கும் அமெரிக்க கடற்படையினருக்கும் இடையில் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள கூட்டு படைநடவடிக்கை தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.