Tamil News
Home உலகச் செய்திகள் அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 2,108 பேர் மரணம்

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 2,108 பேர் மரணம்

கோவிட்-19 வைரசின் தற்போதைய மையப்புள்ளியாக காணப்படும் அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,108 பேர் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் மாநிலங்களில் நியூயோர்க் மாநிலமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 777 பேர் மரணமடைந்துள்ளனர்.

இருந்தபோதும் புதிய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறைந்து வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது வரையில் அமெரிக்காவில் 18,761 பேர் மரணமடைந்துள்ளதுடன், 503,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் 18,849 பேர் மரணமடைந்துள்ளதுடன், 147,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version