அமெரிக்கப் படைகளை நாட்டுக்குள் அனுமதிக்கமாட்டோம்: சிறீலங்கா

அமெரிக்கப் படைகளை நாம் சிறீலங்காவுக்குள் அனுமதிக்கப்போவதில்லை என்பதுடன், சிறீலங்காவில் அவர்கள் தளம் அமைக்கவும் முடியாது என சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்த்தனா இன்று (05) தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட சிறப்பு அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாம் அமெரிக்காவுடன் எந்த ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளவில்லை, எனவே அமெரிக்கப் படைகளை நாட்டுக்குள் அனுமதிக்கப்போவதில்லை, அதுமட்டுமல்லாது அவர்கள் இங்கு தளம் அமைக்கவும் முடியாது.

அமெரிக்கா தளம் அமைக்கப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதில் அர்த்தமில்லை. நாம் எந்த உடன்பாட்டிலும் கையெழுத்திடவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.