அபிவிருத்திக் கொள்கை செயற்பாட்டுத் திட்டத்திற்கு உலக வங்கி பாராட்டு

இலங்கையின் அபிவிருத்திக் கொள்கை செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் உலக வங்கிப் பிரதிநிதிகளால் பாராட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் அபிவிருத்திக் கொள்கை செயற்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பாக உலக வங்கிப் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற தொடரின் இறுதிக் கலந்துரையாடலுக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமைப் பணியாளருமான சாகல ரத்நாயக்க தலைமை தாங்கினார்.

இச்சந்திப்பின் போது, ​​இலங்கையின் அபிவிருத்திக் கொள்கை செயற்பாட்டு முன் நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கான அடுத்த படிகளான பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை நிறுவுதல், அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு, நலன்புரி நலன் செலுத்தும் முறைமைகள், சமூகப் பதிவேடு மற்றும் அதற்கான காலக்கெடுக்கள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.