Home செய்திகள் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் விழிப்புணர்வுப் போராட்டம் 40,000 மக்களைச் சென்றடைந்துள்ளது

அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் விழிப்புணர்வுப் போராட்டம் 40,000 மக்களைச் சென்றடைந்துள்ளது

முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சியின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம் முகநூல் ஊடாக விழிப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது.

தமிழ் ஆங்கிலம், ஜேர்மன் மொழிகளில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தினரின் செயற்பாடுகளுக்கு பல்லின மக்களிடமும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.CETR 2 7 அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் விழிப்புணர்வுப் போராட்டம் 40,000 மக்களைச் சென்றடைந்துள்ளது

கடந்த ஐந்து நாட்களில் மூன்று மொழிகளிலும் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுப் போராட்டம் 40,000 மக்களை சென்றடைந்துள்ளது. அதுமட்டுமல்லாது 1000 இற்கு மேற்பட்ட நபர்களில் விருப்புத்தளத்தில் உருவாங்கப்பட்டுள்ளது.

இது இந்த பரப்புரைக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும். எனினும் இந்த அமைப்பினரால் தயாரிக்கப்பட்ட பல காணொளிகளை முகப்புத்தக நிறுவனம் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாது நிறுத்தியும் வைத்துள்ளனர்.எனினும் ஈழத்தமிழ் மக்களின் துயரம் அனைத்துலக சமூகத்தை சென்றடைய வேண்டும் என்ற இலட்சியத்துடன், அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம் அதிக சிரமங்களுடன் இயங்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version