Tamil News
Home உலகச் செய்திகள் அந்தமான், பெருவில் வரிசையாக பலத்த நிலநடுக்கம்

அந்தமான், பெருவில் வரிசையாக பலத்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று காலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகிய நிலநடுக்கம், மேற்கு வங்கத்தில் உள்ள பன்குரா மாவட்டத்தில் 4.8ஆக பதிவாகியுள்ளது. இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

அமேசான் காடுகள் சூழ்ந்திருக்கும் தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8ஆக பதிவாகியுள்ளது.

வடக்கு பெருவில் மோயாம்பா நகரில் இருந்து 180 km தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 109.09km ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஆனால் உயிரிழப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

இதைத் தொடர்ந்து கொலம்பியா, ஓகுவேடார் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே சமயம் இதனால் எங்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அடுத்தடுத்து ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version