அதிரடியாக வந்தார் சந்திரிகா! குழப்பத்துடன் முடிந்த சுதந்திரக் கட்சிக் கூட்டம்

சுதந்திரக் கட்சியின் தலைமையத்தில் நேற்று இடம்பெறவிருந்த கட்சி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அது இரத்துச் செய்யப்பட்டது.

மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக்கலந்துரையாடல் இடம்பெறவிருந்தது. அப்போது அதற்கு அழைப்பு விடுக்கப்படாத முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அங்கு வந்தமையால் அமைதியின்மை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்திரிகாவின் வருகையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, மைத்திரிபால அங்கு வரவில்லை. சந்திரிகாவின் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு அமைப்பாளர்கள் அங்கிருந்து சென்றனர் என்றும், இறுதியில் சந்திரிகாவும் அங்கிருந்து சென்றுவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.