Home செய்திகள் ‘ஸ்டாலின் ஐயா எமக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவார்’-12ம் நாள் போராட்டத்தில் ஈழ அகதிகள்

‘ஸ்டாலின் ஐயா எமக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவார்’-12ம் நாள் போராட்டத்தில் ஈழ அகதிகள்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் என்ற தனி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர் ஆகிய  எங்களை, தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி  இன்று 12வது நாளாக  காத்திருப்பு போராட்டத்தினை நடத்தி வருகின்றோம்.

WhatsApp Image 2021 06 20 at 1.52.08 PM 1 'ஸ்டாலின் ஐயா எமக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவார்'-12ம் நாள் போராட்டத்தில் ஈழ அகதிகள்

இதுவரை  எந்தத் தீர்வும் கிடைக்காத நிலையில் தொடர்ச்சியாக எமது போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.

நாளைய தினம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில் எமக்கான  ஒரு தீர்வினை மாண்புமிகு முதலமைச்சர்  வழங்குவார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்புடன் நாம் அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற இந்த சூழ்நிலையில்,  நம்பிக்கையின் இறுதி வாய்ப்பாக மாண்புமிகு  தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின் ஐயா எமக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவார் என  காத்திருக்கின்றோம்.

Exit mobile version