ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக், இன்று (23) மாலை இலங்கையை வந்தடைந்தார்.
இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை அவர், நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அவர் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்பினரையும், வடக்கு கிழக்கின் ஆர்வலர்களையும் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.
அத்துடன், கொழும்பிலும், சிவில் சமூகத்தினரையும், கர்தினாலையும் அவர் சந்திக்கவுள்ளார்.
இந்தநிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரிடம் கடிதமொன்றை கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சமூக ஆர்வலர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் செம்மணி சிந்துபாத்தி மயான பகுதிக்கு வருகைத்தருவாரா? என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்றும் வேலன் சுவாமிகள் குறிப்பிட்டார்.