Tamil News
Home செய்திகள் வெள்ளை வானில் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர்- விசாரணைகள் ஆரம்பம்

வெள்ளை வானில் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர்- விசாரணைகள் ஆரம்பம்

சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்  சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 25 ஆம சுவிட்சர்லாந்து தூதரகத்தில் சேவை செய்யும் பெண் பணியாளர் ஒருவர், வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டு சுமார்  இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது.இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகளுக்கு சுவிட்சர்லாந்து தூதரகம் ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாக விசாரணை அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மோக்குக்கும், சிறிலங்கா வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று, நேற்று (27) மாலை நடைபெற்றது  குறிப்பிடத்தக்கது .

 

Exit mobile version