வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறையை கட்டியமைக்க சிறீலங்கா கடும் முயற்சி

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரவுள்ள வந்து இறங்கியதும் நுளைவு அனுமதி பெறும் நடைமுறை இலங்கையில் 39 நாடுகளுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்த போதும், ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலினால் இந் நடைமுறை அமுலுக்கு வராமல் போனது.

இந் நடைமுறைக்கு அமைவாக ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, கம்போடியா, தஸ்யா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்ரோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிறிஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லட்டிவியா. லித்வேனியா லக்சம்பேக், மோல்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ரொமேனியா, ஸ்லோபேனியா, ஸ்பெயின், சுவீடன், ஐக்கிய இராஜ்ஜியம், அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, தென்கொரியா, கனடா, சிங்கப்éர், நியுசிலாந்து, மலேசியா, தாய்லாந்து, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.