Tamil News
Home ஆய்வுகள் வீணான எதிர்பார்ப்பு – விதுரன் 

வீணான எதிர்பார்ப்பு – விதுரன் 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடைபெற்று ஆறு ஆண்டுகள் நிறைவுக்கு வந்திருக்கின்றன. ஆண்டுகள் ஆறு கடந்திருக்கின்றபோதும் நீதியை நிலைநாட்டல் பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்தவிதமான முன்னேற்றங்களும் நடைபெற் றிருக்கவில்லை.
விசேடமாக ஆட்சி மாற்றத்தின் பின்ன ரான சூழலிலும், புதிய ஆட்சியாளர்கள் தொடர்ச்சி
யாக மேடைகளில் வெளிப்படுத்தி வந்த வாக்குறுதிகளின் அடிப்படையிலும் கடந்த 21ஆம் திகதிக்கு முன்னதாக ‘சூத்திரதாரிகள்’ அம்பலப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் எதுவுமே நடைபெற்றிருக்கவில்லை.
குறிப்பாக, ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்க ஆட்சியதிகாரத்தினை கையிலெடுத்து ஆறு
மாதங்களாகியுள்ள நிலையில் அவர் தலைமையி லான அரசாங்கத்தின் மிக முக்கியமான வெளிப் பாடக 21ஆம் திகதிக்கு முன்னதான அறிவிப்பு இருக்கும் என்றே கருதப்பட்டது. எனினும், ஜே.வி.பி.தேசிய மக்கள் சக்தி ஆட்சிப்பீடத்தில் ஏறுவதற்கு முன்னதாக கடந்த 21ஆம் திகதியோ அதற்கு முன்னதாகவோ ‘எதிர் பார்ப்புக்களை நிறைவேற்றத்தக்கவாறான’ எந்த அறிவிப்புக்களும் வெளியாகவில்லை.
மாறாக கடந்த 20ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் ஆவணங்கள் அடங்கிய தொகுதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன் பின்னர் பொலிஸ் திணைக்களம், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.தொடர்ந்து அந்தக்குழுவில் உயிர்த்த ஞாயிறு விசாரணைகளில் ஏலவே ஈடுபட்டு இடைநிறுத்தப்பட்டிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஐந்தாவதாக பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவால் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது.
இதனைத்தவிரவும் இவ்விடயம் சம்பந்த மாக  அரச விசாரணை இயந்திரங்களின் ஒட்டுமொத்த அடைவுமட்டமாக இருப்பது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை திசை திருப்பிய குற்றச்சாட்டில் எஸ்.எம்.பண்டார என்ற பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளமையாகும்.
பிள்ளையானும் தொடர்ந்து அவரது சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளபோதும் அவர்
கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புபட்டமைக்காக மட்டும் கைது செய்யப் படவில்லை. பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தப்ப ட்டு காணாமலாக்கப்பட்டமையே பிரதான விடய மாக வைத்து கைதாகியுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மட்டும் தான் பிள்ளையானிடத்திலான விசாரணையில் ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்’ குறித்த தகவல்களும் கிடைத்துள்ளதாக கூறிக் கொண்டிருக்கின்றார்.
பொலிஸ் திணைக்களமோ, குற்றப்புலனாய் வுப் பிரிவினரோ இந்த விடயத்தில் எந்தவொரு விடயங்களையும் வெளிப்படுத்தவில்லை என் பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
ஆகவே, ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மையப் படுத்தி ‘தேசிய பாதுகாப்பு பலமாக இல்லை’ என்று கூறி ராஜபக்ஷக்கள் மீள ஆட்சியை 2019இல் கைப்பற்றினர்.
தற்போது அநுரகுமாரவும் அவரது சக பாடிகளும் ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரிகளை வெளிப்படுத்துவோம்’ என்று கூறி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கின்றார்கள்.
அந்தவகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஆட்சிப் பீடமேறுவதற்கான ‘ஒரு கருவி
யாகவே’ பயன்படுத்தும் நிலைமை தொடர்கின்ற மையானது கவலைக்குரியதாகும்.அந்த வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் களால் உறவுகளை இழந்து, காயங்களால் வடுக்களைச் சுமக்கும் பாதிப்புற்ற அனைத்து தரப்பினருக்கும் பெரும் ஏமாற்றமே.
பேராயர் ரஞ்சித் ஆண்டகைக்கும் ஏமாற்றம் தான். கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறன்று நடைபெற்றிருந்த விசேட ஆராதனைகளின்போது அவர் ஆற்றிய உரை அதனை நேரடியாக இல்லாவிட்டாலும் வெளிப்படுத்தியிருக்கின்றது.
எனினும் அவரால் எதனையும் செய்ய முடியாது. அநுர அரசாங்கத்தில் இன்னும் நம்பிக்கை கொண்டவராக இருக்கின்றார். பாதிக்கப் பட்ட மக்கள் சார்பில் அவர் ஏழு கோரிக்கைகளை பகிரங்கமாக விடுத்திருக்கின்றார்.
2009இல் முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக உயிர்கள் அழிக்கப்பட்டபோது அவர் வாயே திறக்கவில்லை. அதன் பின்னர் அங்கு நிகழ்ந்தேறிய மனித குலத்துக்கு எதிரான அத்தனை குற்றங்கள் குறித்தும் பிரதிபலிக்கவே இல்லை.
அதற்காக குரல் கொடுத்த வடக்கு, கிழக்கு மறைமாட்ட பேராயர்கள் மீது ‘அடக்குமுறை, அச்சுறுத்தல்’போர் தொடுத்திருந்தார் பேராயர் ரஞ்சித் ஆண்டகை. அவ்விதமாக தனது ‘ராஜபக்ஷ’ அரச விசுவாத்தினைக் காண்பித்த அவர் பொது வெளியில் அரசாங்கத்திடம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொறுப்புக்கூறுமாறு வலியுறுத்து வது வரவேற்கத் தக்கது தான். ஆனால் பேராயர் விடுத்துள்ள கோரிக்கை யில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக சுயாதீனமான வழக்குத்தொடுநர் அலுவலக மொன்றை நிறுவ வேண்டும் என்று குறிப் பிட்டுள்ளார்.
அடுத்ததாக, தாக்குதலின் பிரதான செயற்பாட்டாளரான சஹ்ரான் ஹாசீம் உள்ளிட்டவர் களுடன் தொடர்புடைய பாதுகாப்புப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் யார் என்பதை பாரபட்சமின்றி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் பேராயர்.பேராயரின் ஏழு கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கப்போவதாக அநுரகுமார தலைமையி லான அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்
திருக்கின்றது. அந்தப் பதில்கள் எப்படியிருக்கப் போகின்ற என்பது முதலாவது கேள்வி
அடுத்ததாக மேற்படி இரண்டு விடயங் களையும் அநுர அரசாங்கம் ‘தற்றுணிவுடன்’ முன்னெடுக்குமா என்பது மிகவும் இரண்டாவது கேள்வி.
மூன்றாவதாக, அநுர அரசாங்கம் அவ்வாறு செயற்பட தயராக இருந்தாலும் அரச நிறுவனக் கட்டமைப்புக்கள் குறிப்பாக நீதிமன்றக் கட்டமைப்பும், பாதுகாப்புக்கட்டமைப்பும் இடமளிக் குமா? என்பது பெருங்கேள்வி.
ஏனென்றால் தமிழின விடுதலைக்கான போராட்டத்தினை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட அனைத்து வகையிலான செயற் பாடுகளிலும் மனித உரிமைகள், மனிதாபிமான சட்டங்கள் ‘தாராளமாகவே மீறப்பட்டுள்ளன’ அதற்காக ஆயிரமாயிரம் உதாரணங்களை குறிப் பிடலாம்.
அவற்றையெல்லாம் மையப்படுத்தியதா கவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையில் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டு வரும் தீர்மானத்தினை ஏற்றுக்கொண்டு பொறுப்புக்கூறலைச் செய்ய வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஐ.நா.மனித உரிமைகள் தீhமானங்கள் ‘முழுமையான திருப்தியை அளிக்காது விட்டாலும்’ முன்னேற்றகரமானதா கவே கருதுகின்றார்கள்.
ஆனால் ‘ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் எந்தவொரு தீர்மானங்களையும் நிறைவேற்று வதற்கு தாங்கள் தயாரில்லை’ என்பதை ஆட்சிப் பீடமேறிய சொற்ப நாட்களிலேயே அநுர அரசாங்கம் அமைச்சரவையில் தீர்மானம் எடுத்து பகிரங்கமாக அறிவித்தாகி விட்டது.
அவ்விதமானதொரு ஆட்சியாளர்களிடத் தில் சுயாதீன வழக்குத் தொடுநர்களையும், பாது
காப்புத் தரப்பினரை விசாரணைக்கு உட் படுத்துவதையும் கோருவது பொருத்தமற்றது. அதனை எதிர்பார்த்திருப்பதும் கால விரயமானது.
ஆகவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களும், அந்த மக்களின் குரலாக தன்னை அடையாளப்படுத்தியுள்ள பேராயர் ரஞ்சித் ஆண்டகையும் இக்கசப்பான புரிதலை கொள்வது காலத்தின் கட்டாயமானது.
அதேநேரம், இனவிடுதலைக்கான போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இந்த விடயத்தினை ‘தேசிய, சர்வதேச வெளிகளில்’ சுட்டிக்காட்டுவதற்கான மிகக் கிட்டிய முன்னு தாரணமாக கொள்ள முடியும்.
அதாவது, அநுரவும் அவரது சகபாடி களையும் கொண்ட அரசாங்கம் ‘தேசிய பொறிமுறையை’ பொறுப்புக்கூறலுக்காக முன் மொழிந்து வருகின்றபோதும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகத்தையோ, பாதுகாப்பு அதிகாரிகளையோ விசாரணைக்கு உட்படுத்துவதற்கு தயாரில்லாத நிலையில் உள்ளார்கள் என்பதாகும்.
அதுமட்டுமன்றி, அநுர அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தினை ‘அரசியல்’ ஆதாய மீட்டுவதற்கான ஒரு கருவியாகவே நகர்த்துகின்றது என்பதும் வழக்கமாக தேசிய மையவாத அரசாங் களை கட்டுப்படுத்தும் ‘அரச இயந்திர சக்திகள்’ தற்போதும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதும் கசப்பானவையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகவே உள்ளன.
ஆகவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, இலங்கை யின் எந்தவொரு இனக்குழுமத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் ‘நியாயமான நீதியை’ ‘ஏற்றுக்கொள் ளத்தக்க பொறுப்புக்கூறலை’ உள்நாட்டில் பெறுவ தென்பது கானல் நீரே.
Exit mobile version