Tamil News
Home செய்திகள் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக அமைதியின்மை

வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக அமைதியின்மை

மட்டக்களப்பு பகுதியிலுள்ள இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக மக்கள் பாரிய எதிர்ப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் உருவப் படங்களை எரித்து, பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version