Home செய்திகள் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இன்று மாலை ஒருவர்சுட்டுக்கொலை

வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இன்று மாலை ஒருவர்சுட்டுக்கொலை

மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இன்று மாலை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இன்று மாலை மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டுற்கு முன்பாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டபோது மெய்பாதுகாவலரால் துப்பாக்கிய பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

IMG 8952 வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இன்று மாலை ஒருவர்சுட்டுக்கொலை

இதன்போது படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மெய்பாதுகாவலரின் துப்பாக்கியையும் பறிக்கமுயன்ற நிலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத்  தெரிவித்துள்ளனர்.

Exit mobile version