Tamil News
Home செய்திகள் விடுதலை செய்யுங்கள், அல்லது கருணைக் கொலை செய்யுங்கள் – தொடரும் ஈழ அகதிகளின் போராட்டம்

விடுதலை செய்யுங்கள், அல்லது கருணைக் கொலை செய்யுங்கள் – தொடரும் ஈழ அகதிகளின் போராட்டம்

திருச்சி மத்திய சிறையில், சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கும் ஈழத்தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி ஈழ அகதிகளின் உண்ணாவிரத போராட்டம் 6 நாட்களை கடந்து முன்னெடுக்கப்படுகின்றது.

தமக்கு எவ்விதமான சலுகைகளும் வழங்கப்படவில்லை, தம்மை யாரும் கவனிப்பதும் இல்லை. தங்களை விடுவிக்குமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்தே தாம் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போராட்டத்தில் கலந்துகொண்ட ஈழ அகதி தெரிவித்தார்.

Exit mobile version