வவுனியாவில் கர்ப்பிணி ஒருவர் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று

வவுனியாவில் கர்ப்பவதி பெண் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்றுமுன்தினம் இரவு வெளியாகின.

அதில், சூசைப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த கர்ப்பவதிப் பெண் ஒருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் ஒருவருக்கும், ஒமேகா ஆடைத் தொழிச்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கும் என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா சகாயமாதாபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வவுனியாவில் 18 நோயாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். நோயாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.