Home உலகச் செய்திகள் வல்லரசுக் கூட்டணியால் வெற்றிகொள்ளமுடியாத போர்;அமெரிக்க-தலிபான் உடன்படிக்கை இன்று

வல்லரசுக் கூட்டணியால் வெற்றிகொள்ளமுடியாத போர்;அமெரிக்க-தலிபான் உடன்படிக்கை இன்று

அல் கொய்தா தீவிரவாதிகளை அழிக்க எனக் கூறி கடந்த 2001 டிசம்பரில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அல்-கொய்தாவுக்கு ஆதரவு அளித்த தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்டது. ஆப்கானிஸ்தானில் க அமெரிக்க படைகள் அங்கு நிலைகொண்டன.

கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.இருந்தும் தாலிபான்களை அமெரிக்க வல்லரசால் வெற்றிகொள்ள முடியவில்லை. அமெரிக்க கூட்டுப்படையினர் அங்கு பாரிய இழப்புகளை சந்தித்துவருகின்றனர்.694940094001 6033173018001 6033178176001 vs வல்லரசுக் கூட்டணியால் வெற்றிகொள்ளமுடியாத போர்;அமெரிக்க-தலிபான் உடன்படிக்கை இன்று

இதுவரை ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 3,500 அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கா தாலிபான்களை
அமைதி பேச்சுக்கு அழைத்தது.

அதைத்தூடர்ந்து இருதரப்புக்கும் பொதுவான கத்தார் நாட்டில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் உடன்பாடு எட்டப்பட்டு கடந்த வாரம் ஒரு வார போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில் கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்கா, தலிபான்கள் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது ரஷ்யா, ஈரான் உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இதில் இந்திய சார்பில் கத்தார் தூதர் குமரன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version