Tamil News
Home செய்திகள் வட்டக்கச்சியில் படையினர் குவிப்பு பாரிய தேடுதலுக்கு ஏற்பாடு

வட்டக்கச்சியில் படையினர் குவிப்பு பாரிய தேடுதலுக்கு ஏற்பாடு

கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் பொலிசார், படையினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன .குறித்த பகுதியில் பாரிய தேடுதல் ஒன்றை படையினர் மேற்கொள்ளலாம் என தெரிய வருகிறது.

இதற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த பகுதியில் நோயாளர் காவு வண்டியும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு முன்பாகவே இவ்வாறு பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப் பட்டுள்ளனர். நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய சிறிதரன் ‘லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் கடைவாயில் தமிழரின் இரத்தம் வடிகிறது’ கூறியிருந்தமை இங்கு குறிப்பிட த் தக்கது

 

Exit mobile version