Tamil News
Home செய்திகள் வடக்கில் மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி – யாழில் அதிபர் ஆசிரியருக்கும் தொற்றியது

வடக்கில் மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி – யாழில் அதிபர் ஆசிரியருக்கும் தொற்றியது

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கும், முல்லைத்தீவில் இருவருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இவர்களில் இருவர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபரும் ஆசிரியரும் அடங்குகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பனவற்றில் நேற்று 668 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்டன.

இதன்போதே வடக்கில் 15 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 12 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். இதில் அதிபர் ஒருவரும் ஆசிரியர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

Exit mobile version