Tamil News
Home செய்திகள் வசந்த கரன்னகொடவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

வசந்த கரன்னகொடவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

சிறீலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அதற்கமைய அவரை எதிர்வரும் 10ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே அவர் அழைக் கப்பட்டுள்ளார்.

அதேபோல் கடற்படை கொமாண்டர் ஆர்.பி.எஸ்.ரணசிங்க மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் எச்.எம்.பி.சி யஹட்டியராச்சி ஆகியோரும் அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு ஆணைக் குழுவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version