அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இன்னும் காட்டுத் தீ அணையாமல் எரிந்து வரும் நிலையில், மீண்டும் வேகமான காற்று வீசக்கூடும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பெரிய அழிவை எதிர்நோக்கி காத்திருக்கிறது அந்த மாநகரம்.
அதேநேரத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் உள்ள தீயணைப்பு வீரர்கள் இரண்டு பெரிய அளவில் ஏற்பட்ட காட்டுத் தீ மற்றும் இரண்டு சிறிய காட்டுத் தீயை அணைக்கப்போராடி வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை அன்று நகரில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் என்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அழிவை எதிர்நோக்கியுள்ளனர்.