Tamil News
Home உலகச் செய்திகள் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தேடுதல் நடவடிக்கை

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தேடுதல் நடவடிக்கை

இந்தோனேசியாவின் ஏசெஹ் மாகாணத்தில் உள்ள Muara Dua மாவட்டத்தின் Meunasah Mee கிராமத்தில் அமைந்திருக்கும் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் அந்நாட்டு குடிவரவுத்துறையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 81 அலைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இம்முகாமிலிருந்த 7 ரோஹிங்கியா பெண்கள் காணாமல் போன நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அலைப்பேசிகளை கொண்டு அகதிகளை கடத்தும் ஏஜெண்டுகளுடன் முகாமில் உள்ளவர்கள் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து இத்தேடுதல் நடவடிக்கை நடந்ததாகக் கூறப்படுகின்றது.
Exit mobile version