Tamil News
Home செய்திகள் யாழ் மண்ணில் ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டம்’

யாழ் மண்ணில் ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டம்’

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் ஐந்தாம் நாள் பேரணி கொடிகாமத்தை வந்தடைந்த, சாவகச்சேரி ஊடாக சென்று யாழ் மண்ணை சென்றடைந்தது…

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த மாபெரும் பேணி இன்று பொலிகண்டியில் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version