யாழ்ப்பாணத்தில் 108 பேர் உட்பட வடக்கில் 143 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி

யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 108 பேர் உட்பட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 143 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகம், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 44 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 99 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.