Tamil News
Home செய்திகள் யாழ்ப்பாணத்தில் சீன கொடி ஏற்றப்பட்ட விவகாரம் -வெளிவிவகார அமைச்சு கருத்து

யாழ்ப்பாணத்தில் சீன கொடி ஏற்றப்பட்ட விவகாரம் -வெளிவிவகார அமைச்சு கருத்து

யாழ்ப்பாணத்தில் கட்டிடமொன்றில் சீன கொடி ஏற்றப்பட்டமை குறித்து தனக்கு இதுவரை தகவல் கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன கட்டுமான நிறுவனத்தின் கட்டிடத்திலேயே சீன கொடி காணப்பட்டதாக டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

இதுவரையில் இது குறித்து தனக்கு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

விசேட நிகழ்வுகளின் போதே தேசியகொடிகள் ஏற்றப்படலாம்,என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் இந்த சம்பவம் உள்ளுரில் பொறுப்பாக உள்ள உள்ளுராட்சியின் நியாயாதிக்கத்தின் கீழ் வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கட்டிடத்தில் நிகழ்வு ஏதாவது இடம்பெற்றுள்ளதா சீன கொடியை ஏற்றுவதற்கு குறிப்பிட்ட நிறுவனம் உள்ளுராட்சிஅமைப்பிடம் அனுமதி பெற்றதா என பார்க்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான உள்ளுராட்சி அமைப்பு இது குறித்து விசாரணை செய்யவேண்டும் வெளிவிவகார அமைச்சில்லை எனவும் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நன்றி-தினக்குரல்

Exit mobile version