யாழில் மேலும் 21 பேருக்குக் கொரோனா – சிறைச்சாலையில் எட்டு பேருக்கு தொற்றியது

யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் 8 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள வர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடம் என இரண்டிலும் 702 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 21 பேருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 8 பேரு க்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசா லையில் நோயாளர் விடுதியில் மூன்று பேருக்கும், வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவருக்கும் என நால்வருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர். சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் ஏற்கனவே சுயதனிமைப் படுத்தப்பட்டிருந்தவர்கள். யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற மூவருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகரில் சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்த 460 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றின் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கின்றோம்” என்றார்.