Tamil News
Home செய்திகள் யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்: விசாரணையில் பொலிஸார்

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்: விசாரணையில் பொலிஸார்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை வடக்கு சித்தங்கேணி பகுதியிலிருந்து வயோதிபப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சித்தங்கேணி – கலை நகர் பகுதியைச் சேர்ந்த 68 வயதடைய கணகரட்னம் லலிதாதேவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் வீட்டில் தனிமையில் இருந்த போது வீட்டின் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவருடைய மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version