Notice: Undefined variable: _SESSION in /home/gi5h742vtw17/public_html/www.ilakku.org/index.php on line 1
யாழில் மேலும் பெளத்த விகாரைகள் | October 3, 2023
Home செய்திகள் யாழில் மேலும் பெளத்த விகாரைகள்

யாழில் மேலும் பெளத்த விகாரைகள்

யாழ். வலி வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் ஒருவருடைய காணியில் பெளத்த விகாரை ஒன்றை இராணுவத்தினர் பெருமெடுப்பில் கட்டி வருவதாக பொது மக்கள் குற்றஞ் சுமத்துகின்றனர்.

முழுமையாக விடுவிக்கப்படாத தையிட்டி பிரதேசத்தில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி தமிழ் மக்கள் போராடி வரும் சூழலில் இந்த பெளத்த விகாரை அங்கு கட்டப்படுவது மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் செயலாகும்.

இது தொடர்பாக இவர்கள் பிரதேச சபையிடம் அனுமதி பெற்றார்களா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

இதேவேளை நாவற்குழியில் கட்டப்பட்ட விகாரை இன்று திறந்து வைக்கப்படுகின்றது.

இவ்வாறான விகாரைகள் கட்டப்படுவது சிங்கள குடியிருப்புகளை நிறுவுவதற்கான ஆரம்ப செயற்பாடாகவே மக்கள் இதனை கருதுகின்றார்கள். இதை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. அல்லது அவர்களின் அனுமதியின்றியே இவை எல்லாம் நடக்கின்றனவா என்பதை மக்கள் இனங்கண்டு கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். இதற்கு ஓர் தீர்க்கமான முடிவை உரியவர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும் என்பதே மக்களின் அபிப்பிராயமாகும்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version