இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக் கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. சில தினங்களில் இந்தியா தம் மீது தாக்குதல் தொடுக்கவுள்ளதாக பாகிஸ்தான் தனது புலனாய்வுத் தகவல்களை மேற் கோள்காட்டி கடந்த புதன்கிழமை(30) தெரிவித்துள்ள நிலையில் இந்தியா தனது வான் பரப்பை பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு தடை செய்துள்ளது.
காஸ்மீர் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதல் சம் பவத்தை தொடர்ந்து அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தனது வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு பாகிஸ்தான் கடந்த வாரம் தடை விதித்ததை தொடர்ந்து தற்போது இந்தியாவின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பாகிஸ்தானின் தாக்குதல் விமானங்கள் இந்திய வான் பரப்பினுள் ஊடுருவலாம் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக இந்தியா இந்த அறிவிப்பை கடந்த புதன்கிழமை(30) வெளி யிட்டுள்ளது. அதாவது இரண்டு நாட்டு வான்பரப்பும் இரு நாட்டு விமானங் களுக்கு எதிர்வரும் 23 ஆம் நாள் வரை மூடப்பட்டுள்ளது.
இந்தியாவின் வான் பரப்பின் ஊடாக மலேசியாவுக்கு செல்லும் பாகிஸ்தான் ஏயர் லைன் விமானங்கள் மட்டுமே தற்போது பறப்பில் ஈடுபடுகின்றன. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் பெருமளவான விமானங்கள் பாகிஸ்தான் வான்பரப்பை பயன்படுத்தி வந்திருந்தன. எனவே பாகிஸ்தானின் தடை இந்திய விமான நிறுவனங்களுக்கு பலத்த நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது.
1971 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்திய – பாகிஸ்தான் போருக்கு பின்னர் காஸ்மீரின் எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் அடிக்கடி மோதல்களில் ஈடுபட்டு வருவதுடன், அந்த பகுதி பதற்றம் நிறைந்த பகுதியாகவும் காணப்படுகின்றது.
இதனிடையே தென்னாசியாவில் அமை தியை ஏற்படுத்த முயலுமாறும், மோதல்களை தவிர்க்குமாறும் அமெரிக்காவின் வெளி விவகார அமைச்சர் மார்க்கோ றுபியோ இந்தியா வெளி விவகார அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோருடன் மேற்கொண்ட தொலை பேசி உரையாடலில் தெரிவித்துள்ளார்.