மேலும் 55 பேர் மரணம் – கொரோனாவுக்குப் பலியானோர் தொகை 2,480 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 55 பேருடைய மரணங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் மரணமானதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியதாகவும் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் பலியானவர்களின் தொகை 2,480 ஆக அதிகரித்துள்ளது.