Tamil News
Home செய்திகள் முஸ்லீம் அரசியல்வாதிகளை பதவி விலகக்கோரி உண்ணாநிலைப் போராட்டம்

முஸ்லீம் அரசியல்வாதிகளை பதவி விலகக்கோரி உண்ணாநிலைப் போராட்டம்

கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலில் தொடர்புடைய முஸ்லீம் அரசியல்வாதிகள் பதவிவிலக வேண்டும் எனத் தெரிவித்து சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், பௌத்த துறவியுமான அதுரலிய ராதான தேரர் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இன்று (31) கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, ஆளுநர் அசாத் சலே மற்றும் அமைச்சர் றிசாட் பத்யூடீன் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் றிசாட் பத்யூடீன் பதவி விலகுவதற்கு தான் 24 மணி நேரம் அவகாசம் கொடுத்ததாகவும் அவர் விலகாததால் தற்போது இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அதுரலிய தேரர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version