மீண்டும் ஸ்தாபிக்கப்படும் நிதி மோசடி குற்றவியல் விசாரணை பிரிவு

‘ நிதி மோசடி குற்றவியல் விசாரணை பிரிவு மீண்டும் ஸ்தாபிக்கப்படும்’ என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்துரைத்த போதே அவர் ‘அடுத்த வாரம் முதல் குறித்த விசாரணை பிரிவு மீண்டும் ஸ்தாபிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

‘கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடி சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தைச் சேர்ந்த 7 பேரும், காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்’

‘இதுதவிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 15 பேரும் கைதாகியுள்ளனர்’
அவ்வாறான குற்றச் செயல்களுக்கு உதவி வழங்கிய 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.