மீண்டும் சீனாவிடம் இருந்து பில்லியன் டொலர்கள் கடன்

சீனாவிடம் இருந்து 1.3 பில்லியன் டொலர்களை கடனாக பெறுவதற்கு சிறீலங்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 1 தொடக்கம் 2 பில்லியன் டொலர்கள் கடனாக கோரப்பட்டதாகவும், ஆனால் 1.3 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு சீனா சம்மதித்துள்ளதாகவும் சிறீலங்கா மத்திய வங்கியின் பிரதித் தலைவர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவின் இந்த நிதி உதவி சிறீலங்காவின் பொருளாதார நெருக்கடியை குறைக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி மாதம் சிறீலங்கா அரசு வங்கிகளிடம் இருந்து 120 பில்லியன் ரூபாய்களை கடனாக பெற்றிருந்தது.

இதனிடையே, அமெரிக்காவின் மிலேனியம் சலஞ்ச் உடன்பாட்டின் 480 மில்லியன் டொலர்களை புறக்கணித்துள்ள சிறீலங்கா, மீண்டும் சீனாவிடம் கடன் பெற்றுள்ளது.