Tamil News
Home செய்திகள் மாவீரர் நினைவு கூரல் மனு யாழ். மேல் நீதிமன்றால் தள்ளுபடி

மாவீரர் நினைவு கூரல் மனு யாழ். மேல் நீதிமன்றால் தள்ளுபடி

மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு மனு யாழ். மேல் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது இ மனு தாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சட்டத்தரணிகளான வி.மணிவண்ணன், தி. அருச்சுனா, வி.திருக்குமரன், செல்வி த.துளசி, திருமதி. க.திருக்குமரன் மற்றும் கே.சஜந்தன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

எதிர் மனுதாரர்களாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்

பிரதிவாதிகள் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version