மாவட்ட வைத்தியசாலைகள் தொடர்பிலான மத்திய அரசின் செயற்பாட்டுக்கு சார்ள்ஸ் எம்பி கண்டணம் 

மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் செயற்பாடானது, மாவட்ட வைத்தியசாலைகளை புனரமைக்க வேண்டும் என்ற நோக்கமாகத் தென்படவில்லை  என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில்  நேற்று (23) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் உரையாற்றும் போது,

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவது தொடர்பாக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவனியா, மன்னார் ஆகியவற்றுக்குரிய வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கு அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளை புனரமைக்க மாகாணத்தின் ஊடாகவே இதுவரை காலமும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் உங்களது செயற்பாடுகள், உண்மையாகவே வைத்தியசாலைகளை புனரமைக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை அத்துடன் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்து வைத்தியசாலையை புனரமைப்பதனை வடக்கிலுள்ள மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றார்.