மலையக மக்களுக்கான காணி உரிமை கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

காணி உரிமை தினத்தை முன்னிட்டு அட்டன் நகரில் கவனயீர்ப்பு பேரணியுடன் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை (21) காலை முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்களின் காணி உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மலையக மக்களின் காணி உரிமை மற்றும்  வீட்டுரிமைக்கான அமைதி வழிப்போராட்டம் எனும் தொனிப்பொருளில்  அட்டன் பல்பொருள் அங்காடியிலிருந்து பஸ்தரிப்பிடம் வரை பேரணியாக வருகைந்தந்து ஆர்ப்பாட்டம்  முன்னெடுத்தனர்.

மலையக மக்களின் காணி உரிமையை கோரிய கோசங்கள் பதாதைகள் ஏந்தி இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மலையக சிவில் அமைப்புகள்,  அரசியல் துறைசார்ந்தோர் கலந்து கொண்டனர்.

இன்றைய ஆர்பாட்ட பேரணிக்கு மலையக அரசியல் அமைப்புகள் தமது  ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.