Tamil News
Home செய்திகள் ‘மணி’ ஆதரவு உறுப்பினர்களின் பதவிகளை பறிக்கிறது முன்னணி – தெரிவத்தாட்சி அதிகாரிக்கு கடிதம்

‘மணி’ ஆதரவு உறுப்பினர்களின் பதவிகளை பறிக்கிறது முன்னணி – தெரிவத்தாட்சி அதிகாரிக்கு கடிதம்

உள்ளூராட்சி சபைகளின் நான்கு உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்குமாறு, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி யாழ். மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்களான தர்ஷிபா, டென்சி ஆகியோரும், சாவகச்சேரி பிரதேச சபைஉறுப்பினர்களான நிதர்சன், சிவகுமார் கஜன் ஆகிய நால்வருமே, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

எனவே இவர்களை சபைகளின் உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினால் யாழ். மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version