மட்டக்களப்பு எல்லையில் நடப்பது என்ன? தொடர்ச்சியாக தாக்கப்படும் தமிழர்கள்- வேடிக்கை பார்க்கும் அரசு

தங்களது மாடுகளை தேடிச் சென்ற தமிழ் பண்ணையாளர்கள் மீது சிங்களவர்கள் மிக மோசமாக தாக்கியதுடன் அவர்களை பிடித்து பொலீசில் ஒப்படைத்து வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணைப் மேச்சத் தரைப்பகுதியில் தாக்குதலுக்குள்ளான ஆறு பண்ணையாளர்களை சிங்களவர் சிலர் பிடித்துச் சென்று மகா ஓயா பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு சிங்களவர்களினால் பிடித்துச் சென்ற பண்ணையாளர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தி சித்திரவதை செய்ததாக தாக்குதலுக்கு உள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கள விவசாயிகளின் பின்னணியில் இருந்து செயற்படும் கிழக்கு மாகாண ஆளுநரே மேற்படி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பதற்கு காரணமாக உள்ளதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் தமிழ் மக்களுக்கு விரோதமாக பிற மாவட்டங்களில் இருந்த சிங்களவர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம் செய்ய அனுமதித்ததன் விளைவாகவே தமிழ் பண்ணையாளர்கள் மீதும் அவர்களது மாடுகள் மீதும் தொடர்ச்சியாக சிங்களவர்கள் தாக்குதல் நடத்த காரணம் எனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒற்றுமையாக இருந்த தமிழ் சிங்கள மக்களின் உறவில் கிழக்கு மாகாண ஆளுநர் விரிசலை ஏற்படுத்தி உள்ளதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.