Tamil News
Home செய்திகள் மட்டக்களப்பில் இதுவரையில் 555 பேருக்கு கொரோனா தொற்று- 6 பேர் மரணம்

மட்டக்களப்பில் இதுவரையில் 555 பேருக்கு கொரோனா தொற்று- 6 பேர் மரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் நடாத்தப்பட்ட  பிசிஆர் பரிசோதனைகளில் 17பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

இவற்றில் 14பேர் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினையும் ஒருவர் காத்தான்குடியினையும் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் எனவும்  அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 555 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் 359பேர் பூரண சுகமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் 186பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் ஆறு பேர் மரணமடைந்துள்ளதாகவும் பணிப்பாளர் மயூரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version