மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமாகிய அநுரகுமார திஸநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது மக்கள் வீழ்ச்சியடைந்த தேசத்தைக் நாம் கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப் பொருளில் யாழ். ரிம்பர் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது அநுரகுமார திஸநாயக்க மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.