Tamil News
Home செய்திகள் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிக்கு – தென்னிலங்கையில் நடந்த சம்பவம்

பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிக்கு – தென்னிலங்கையில் நடந்த சம்பவம்

அம்பாந்தோட்டை – ஹங்கம பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பௌத்த துறவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்துள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்காக பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதன் போது நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்த பௌத்த துறவி மீது துப்பாக்கி சூடுபட்டமையினால் அவர் உயிரிழந்துள்ளார்.

Exit mobile version