பேச்சுச் சுதந்திரம் உண்மையில் அவசியமா? (பகுதி 1) தமிழில்: ஜெயந்திரன்

நான் ஒரு வரலாற்று ஆசிரியன். வரலாற்றைப் பொறுத்த வரையில் ஒரு முக்கியமான விடயத்தை நான் கற்பிக்கிறேன். அது பேச்சுத் சுதந்திரத்தைப் பற்றியது. பேச்சு சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் போது ஒரு கேள்வி எனக்குள்ளே மீண்டும் மீண்டும் எழுகின்றது. பேச்சுத் சுதந்திரத்தை உண்மையில் நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்? அதிலும் முக்கியமாக மற்றவர்களைப் பாதிக்கக்கூடிய விடயங்களை ஒருவர் பேசும் போது, ஒரு குறிப்பிட்ட சாரார் மீது வெறுப்பைத் தூண்டக்கூடிய வகையில் ஒருவர் பேசும் போது, அல்லது தவறான விதத்தில் ஓர் குறிப்பிட்ட விடயம் பற்றி ஒருவர் பேசும் போது, இன்னும் மற்றவர்களைப் பாதிக்கக்கூடிய வகையில் ஒருவர் பேசும் போது? இவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் எதற்காகப் பேச்சுச் சுதந்திரத்தை நாம் அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வி எனக்குள்ளே எழுகின்றது.
உண்மையில் இந்தக் கேள்வி ஒரு நல்ல கேள்வியாகவே எனக்குத் தெரிகிறது. ஒரு வரலாற்று ஆசிரியனாக இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். இதற்கு விடையளிக்கும் முகமாக ஒரு சம்பவம் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். இது மேரி பெத் ரிங்கரைப் பற்றியது (Mary Beth Tinker) . இந்தப் பெயரை நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். வியட்நாம் போரில் அமெரிக்காவின் பங்குக்கு தனது எதிர்ப்பைப் பதிவுசெய்வதற்காக, 1965ம் ஆண்டு, வெறும் பதின்மூன்று வயதாகிய மேரி பெத் ரிங்கர், தனது கையிலே ஒரு கறுப்புப்பட்டியை அணிந்து அமெரிக்காவின் அயோவா (Iowa) மாநிலத்தில் உள்ள, டே மொயின் (Des Moines) என்ற இடத்தில் அமைந்துள்ள தனது இடைநிலைப் பள்ளிக்குச் சென்றார்.
இவ்வாறான ஒரு கருத்து வெளிப்பாடு பாட சாலைச் சமூகத்துக்குப் பொருத்தமற்றது எனக்கூறி பாடசாலை அதிகாரியினால் மேரி பெத் ரிங்கர் வீட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாடசாலையில் பேச்சுச் சுதந்திரம் தொடர்பான ஒரு மிகவும் பிரபலமான வழக்கு ஒன்றில், மேரி பெத் ரிங்கர் வழக்குத் தொடர்ந்தார். டே மொயின் நகரத்துக்கு எதிரான வழக்காக அந்த வழக்கு அமைந்திருந்தது. நான்கு வருடங்களுக்குப் பின்னர் “பாடசாலைக்குக் கறுப்புப்பட்டி அணிந்து செல்ல மேரி பெத் ரிங்கருக்கு உரிமை இருக்கிறது” என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாடசாலைக்குள் நுழையும் பொழுது ஆசிரியர்களோ அன்றேல் மாணவர்களோ தமக்கான பேச்சு சுதந்திரத்தை உறுதிசெய்கின்ற அரசியல் சாசனத்தின் முதலாவது திருத்தத்தைக் கைவிடுவதில்லை (First Amendment)  என்ற வாதத்தை நீதிமன்றம் அப்போது முன்வைத்தது.
உண்மையில் மேரி பெத் ரிங்கர் என்னை விட அதிகம் வயது கூடியவர் அல்ல. அவர் எனது காலத்தைச் சேர்ந்தவர். அதுமட்டுமன்றி அவர் எனது நண்பரும் கூட. சில வருடங்களுக்கு முன்னர்பெ ன்சில்வேனியாவிலுள்ள எனது வகுப்பறைக்கு அவர் வருகை தந்து, தனது கறுப்புப் பட்டிக் கதை தொடர்பாக எனது மாணவர்களுடன் உரையாடி னார். உரை முடிந்ததும் கேள்விகளுக்கான நேரம் வழங்கப்பட்டது.
முதலாவதாகக் கேள்வி கேட்ட மாணவர் பின்வருமாறு கூறினார்:
“செல்வி ரிங்கர் அவர்களே நீங்கள் ஒரு நல்ல நோக்கத்துக்காகப் போராடினீர்கள். அப்போது வியட்நாமில் அமெரிக்கா மேற்கொண்டிருந்த யுத்தத்துக்கு எதிராக நீங்கள் போராடினீர்கள். ஆனால் இப்போது பலர் மக்களை நோகச் செய்யக்கூடிய பல கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறானவர் பேசுவதற்கு நாங்கள் உண்மையில் அனுமதிக்க வேண்டுமா? என்றார். அப்போது மேரி பெத் ரிங்கர் பின்வருமாறு பதிலளித்தார். அன்று 1965 இல், நான் கல்வி கற்ற டே மொயின் வாறன் ஜி ஹாடிங் (Warren G.Harding Middle School) இடைநிலைப் பள்ளியைச் சற்று நினைவில் கொள்ளுங்கள்! எனது வகுப்பில் பல பிள்ளைகள் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களது தந்தைமார், சகோதரர்கள், மாமன்மார் என அவர்களது உறவுகள் பலர் அப்போது அந்தத் தென்னாசிய நாட்டில் நடைபெற்ற போரில் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். எனது செயல் அவர்களுக்கு நோவை ஏற்படுத்தியிருக்க மாட்டாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவர்களது உறவுகள் எல்லாரும் ஒரு அர்த்தமற்ற விடயத்துக்காகப் போராடுகின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் போது, அவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தியிருக்க மாட்டாதா?
நிச்சயமாக எனது செயல் அவர்களுக்கு நோவைத் தந்தது. அது அவர்களைப் பாதித்தது. எமது பேச்சு நிச்சயமாக மற்றவர்களைப் பாதிக்கிறது. ஒரு பேச்சு மற்றவர்களைப் பாதிக்க வில்லை என்றால் அதனை நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டிய தேவை இல்லை. பொருள் பொதிந்த எந்தப் பேச்சும் மற்றவர்களைப் பாதிக் கும் என்பது தான் உண்மை. நிச்சயமாக எனது பேச்சு மற்றவர்களைப் பாதித்தது. மற்றவர்கள் பாதிக்கப்படுகின்றார்களா இல்லையா என்பதை வைத்து நீங்கள் பேச்சு சுதந்திரத்தை அளவிடப் போகின்றீர்கள் என்றால் மேரி பெத் ரிங்கரை நீங்கள் மறந்துவிடுங்கள். உண்மையில் பேச்சுச் சுதந்திரத்தையே மறந்துவிடுங்கள்.
அப்போது இன்னொரு மாணவர் இன் னொரு கேள்வியைத் தொடுத்தார். “பேச்சு சுதந்திரம் தொடர்பான விவாதம் வெறும் யதார்த்தத்து டன் தொடர்பற்ற ஒரு விவாதமாக உங்களுக்குத் தெரியவில்லையா? உண்மையில் இது அதிகாரம் தொடர்பானது. ஒரு சிலருக்கு அதிகாரம் இருக் கிறது. இன்னும் சிலரிடம் அந்த அதிகாரம் இல்லாமல் இருக்கிறது. யார் யாரெல்லாம் அதி காரத்தைக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் பேச்சுச் சுதந்திரம் பற்றிப் பேச விழை கின்றார்கள்.” இந்தக் கேள்விக்கும் மேரி பெத் ரிங்கர் நல்ல பதிலடி கொடுத்தார்: “மாணவர்களே இங்கே பாருங்கள்! 1965ம் ஆண்டில் வாறன் ஹாடிங் இடைநிலைப்பள்ளியில் நான் வெறும் 13 வயது நிரம்பிய பெண்பிள்ளை. நான் ஒரு சிறு பிள்ளை. பேச்சு என்ற அதிகாரம் ஒன்று மட்டுமே என்னிடம் இருந்தது. அந்த அதிகாரத்தை நீங்கள் என்னிடமிருந்து பறித்தால், அதனால் பாதிக்கப்படப்போவது சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களே. அப்படி நடந்தால் மிகவும் குறைவான அதிகாரத்தைத் தன்னகத்தே கொண்ட மக்கள் அதனால் பாதிக்கப்படுவார்கள். அது அவர்களுக்குத் தோல்வியை ஏற்படுத்தும். ஆகவே சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு அது நிச்சயமாகத் தேவை. ஆகவே தான் அதனைக் கொண்டு தாம் சந்திக்கும் அனுபவங்களை அவர்க ளால் விமர்சிக்கக்கூடியதாகவிருக்கும்.
இது பிரபலமான சிக்னி  வில்கின்சன் அவர்கள் வரைந்த கேலிச் சித்திரம். இந்தத் தலைப்பில் நான் எழுதிய ஒரு நூலுக்கான கேலிச் சித்திரங்களை அவர் வரைந்திருந்தார். கேலிச் சித்திரத்துக்காக அமெரிக்காவில் முதலாவதாகப் புலிற்சர் பரிசை வென்ற பெண்மணி அவர். எனது முக்கிய விவாதத்தை இந்தச் சித்திரம் பிரதிபலிக்கின்றது. அன்று மாட்டின் லூதர் கிங் (Martin Luther King) குடியுரிமைகள் (Civil Rights) தொடர்பான தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சொற்பொழிவை மேற்கொண்ட பொழுது, வெள்ளை இனத்து மேலாதிக்கவாதிகளுக்கு அது நோவை ஏற்படுத்தவில்லையா? ஆம். அந்தச் சொற்பொழிவு அவர்களைப் பாதித்தது. ஆனால் அதனை அடிப்படையாக வைத்து பேச்சுச் சுதந்தி ரத்தை நாங்கள் நிராகரிக்கமுடியாது.
ஆகவே நாங்கள் எழுதிய அந்த நூலில் பேச்சுச் சுதந்திரம் ஏன் முக்கியமானது என்பதை வலியுறுத்துவதற்காக நான்கு விவாதங்களை நாங்கள் முன்வைக்கிறோம். இந்தப் பேச்சுச் சுதந்திரம் தான் எங்கள் தலைவர்களை விமர்சிக்க எங்களை அனுமதிக்கிறது. இந்தப் பேச்சுச் சுதந்திரம் அடக்குமுறைக்கு உள்ளாகுபவர்கள் அதற்கு எதிராகக் கிளர்ந்தெழ அவர்களை அனுமதிக்கி றது. அந்தப் பேச்சுச் சுதந்திரத்தைக் கொண்டு தான் எமக்கு விரும்பிய புத்தகங்கள் மற்றும் இலக்கியங்களை நாங்கள் வாசிக்கிறோம், எமக்கு விருப்பமான திரைப்படங்களை நாங்கள் பார்க்கிறோம்.
இந்தப் பேச்சுச் சுதந்திரத்தை அடிப் படையாக வைத்தே பாடசாலையில் ஆசிரியர் களாக இருந்தாலென்ன மாணவர்களாக இருந்தா லென்ன தங்கள் மனதுக்குப் பட்டதை வெளியில் வெளிப்படுத்துகிறார்கள். பேச்சுச் சுதந்திரம் தொடர்பான வரலாற்றை நாங்கள் படிப்பதற்கான காரணம் என்னவென்றால் பல சந்தர்ப்பங்களில் அந்தச் சுதந்திரம் மீறப்படுகின்றது. இதன் காரண மாகத் தான் கடந்த காலத்தைப் பற்றி நாம் படிக்க வேண்டும். இந்த விடயம் எவ்வளவு கவனமாக அணுகப்பட வேண்டும் என்பதை இதிலிருந்து நாங்கள் புரிந்துகொள்ளலாம்.
தொடரும்..
நன்றி: TED TALKS