Tamil News
Home செய்திகள் பெதுச்சபையில் நிதி ஒதுக்கீட்டை முறியடிக்க சிறீலங்கா திட்டம்?

பெதுச்சபையில் நிதி ஒதுக்கீட்டை முறியடிக்க சிறீலங்கா திட்டம்?

இந்த வாரம் ஜெனீவாவில் சிறீலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதம் ஐ.நாவின் 76 ஆவது பொதுச்சபையில் இடம்பெறும் போது அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் சிறீலங்கா அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்காவின் நடவடிக்கைகளை கண்காணிக்க மற்றும் சாட்சியங்களை சேகரித்து பாதுகாப்பதற்கு என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு 2.8 மில்லியன் டொலர்கள் நிதி உதவியை கோரவுள்ளது.

இந்த விவகாரத்தை எவ்வாறு தொழில்நுட்ப ரீதியாக அணுகுவது என்பது குறித்து சிறீலங்கா அரசு சிந்தித்து வருகின்றது.

ஐ.நா பெருமளவு நிதியை கோரவுள்ளதானது அது நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதை காட்டுவதாக ஐ.நாவுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி கலீல் ஹசீமி தெரிவித்திருந்தார்.

இதனிடையே, சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் குறித்து சேகரிக்கப்படும் ஆதாரங்களில் செய்மதி புகைப்படங்களின் ஆதாரங்களையும் ஆய்வு செய்வதற்கு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழ் மக்கள் மற்றும் அமைப்புக்கள் தம்மீது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை உரிய முறைப்படி ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் அல்லது அது சார்ந்த மனித உரிமை அமைப்புக்களின் ஊடாக சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version