ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க மூன்று நாள் விஜயமாக இந்தியா சென்று திரும்பி யிருக்கின்றாா். இந்த விஜயம் அதிகளவுக்கு ஊடக கவனத்தைப் பெற்றிருந்தது. குறிப்பாக இந்திய ஊடகங்கள் அவரது விஜயம் குறித்த செய்திக்கு மிகுந்த முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்தன. புதுடில்லியில் வந்து இறங்கிய போது அநுரகுமார திசநாயக்கவை இந்திய அமைச்சா் எல்.முருகன் வரவேற்றது கொழும்பு ஊடகங்களில் விமா்சனத்து க்கு உள்ளாகியிருந்தது.
அநுரவின் டில்லி விஜயம் முக்கியத்துவம் பெற்றமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று – அவா் இந்திய எதிா்ப்பை தமது பிரதான கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டிருந்த கட்சி ஒன்றின் தலைவா் என்பது. இரண்டு, ஜே.வி.பி. ஒரு சீன சாா்பு அமைப்பாக அடையாளம் காணப்பட்டிருந்தது. ஜே.வி.பி.யின் வளா்ச்சியில் கடந்த காலங்களில் சீனா சம்பந்தப்பட்டிருந்தது.
இலங்கையை மையப்படுத்திய சீன – இந்திய வல்லரசுப் போட்டி இப்போது தீவிர மடைந்திருக்கும் பின்னணியில், அநுர எவ்வாறு காய்களை நகா்தப்போகின்றாா் என்பதை இராஜதந்திர வட்டாரங்கள் உன்னிப்பாக அவதா னித்துக்கொண்டிருந்தன. தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொண்டவராகவே அநுரவின் அணுகுமுறை காணப்பட்டது.
கடந்த கால ஜே.வி.பி.யின் வரலாறு எவ் வாறிருந்தாலும், இந்தியா குறித்த கடும் போக்கை ஜனாதிபதி மாற்றிக்கொண்டிருக்கின்றாா் என்பது இந்த விஜயத்தின் போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. பூகோள அரசியலை அனுசரித்துச் செல்ல வேண்டிய தேவை இருப்பதை உணா்ந்து கொண்ட ஒருவராகவே ஜனாதிபதியின் அணுகுமுறை இருந்தது. இந்தியாவை தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்துக்கு அவா் தெரிவு செய்ததன் மூலமாகவே அதனை அவா் உணா்த்தி யிருந்தாா்.
இந்த விஜயத்தின் போது பின்வரும் ஐந்து அம்சங்கள் முக்கியத்துவம் பெற்றிருப்பதை அவ தானிக்க முடிகின்றது. முதலாவது, இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் முயற்சிகளுக்கு இந்தியா வழங் கிய உதவிக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். இரு நாடுகளும் வர்த்தகம், சக்திவளம், மற்றும் கட்டமைப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தின.இரண்டாவது, இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் இலங்கை நிலம் பயன் படுத்தப்படாது என்று ஜனாதிபதி அநுர உறுதி யளித்தார். மூன்றாவது, இலங்கை, பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் உறுப்பினராக சேர்வதற்கான விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஆதர வைப் பெறுவதற்கான முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டன. இந்தியா அதற்கு சாதகமாக பதிலளித்தது.
நான்காவது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசு தமிழ் மக்களின் அபிலா ஷைகளை நிறைவேற்றும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார். இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக அமல் படுத்துவதற்கான வாக்குறு தியை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் அவா் வலியுறுத்தினா். அதேபோல மாகாண சபை களுக்கான தோ்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் மோடி குறிப்பிட்டாா்.
ஐந்தாவதாக, இரு நாடுகளுக்கும் இடையி லான மீனவா் பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப் படையில் தீா்வு காணப்பட வேண்டும் என்றும் இணக்கம் காணப்பட்டது. இலங்கையின் நிலப்பகுதி இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப் படமாட்டாது என்று இலங்கை ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி புதுடில்லி எதிா்பாா்த்த முக்கியமான விடயம். இந்திய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் டோவாலுடன் மூன்று மாதங்களுக்கு முன்னா் கொழும்பில் நடத்திய பேச்சுவாா்த்தைகளின் போதும் அநுர இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தாா்.
ஜனாதிபதித் தோ்தலை எதிா்கொண்டிருந்த நிலையில் அதனை அப்போது டோவாலிடம் தெரி வித்திருந்த அவா், இப்போது ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள பின்னணியில், இந்தியப் பிரதமரிடமே அதனை நேரடியாகத் தெரிவித் திருக்கின்றாா்.
இவ்வாறான வாக்குறுதி ஒன்றை இந்தியா எதிா்பாா்த்தமைக்குக் காரணம் இருந்தது. சீனாவின் ஆய்வுக் கப்பல்கள் அடிக்கடி இலங்கைக் கடற் பகுதிக்குள் வந்து செல்வதும், கடலாய்வுகள் என்ற பெயரில் சீனத் தரப்பினா் மேற்கொள்ளும் செயற்பாடுகளும் புதுடில்லிக்கு எப்போதும் கவலையைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இந்தியாவின் கவலைகளையடுத்து வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கு ரணில் விக்கிரமசிங்க ஒரு வருட காலத்துக்குத் தடை விதித்திருந்தாா். அந்தத் தடை இம்மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தத் தடையைத் தொடருமா என்ற கேள்வி எழுப்பப் பட்டிருக்கும் நிலையில்தான், பொதுவான முறையில், “இலங்கையின் நிலப்பகுதி இந்தியா வுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதற்கு அனு மதிக்கப்பட மாட்டாது” என்று ஜனாதிபதி கூறி யிருக்கின்றாா்.
இலங்கையின் முக்கிய துறைமுகங்களான கொழும்பு, அம்பாந்தோட்டை ஆகியவற்றில் சீனாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருக் கின்றது. இதனால், சீனாவின் செல்வாக்கை முற்றிலுமாக ஒதுக்க முடியாது என்ற கருத்தும் உள்ளது. “சீனாவின் கப்பல்கள் வந்து செல்லலாம். ஆனால், அவை இந்தியாவின் பாதுகாப்புக்கு எவ்வகையிலும் குந்தகமாக அமையாது” என்ற வாறான ஒரு நிலைப்பாட்டைத்தான் அரசாங்கம் எடுத்திருப்பதாகத் தெரிகின்றது.
இலங்கை, கடல்சார் சட்டங்களை (UNCLOS) பின்பற்றும் நாடாக இருப்பதால், சீன கப்பல்களுக்கு முழுமையான தடைகள் விதிக்க முடியாத நிலையும் உள்ளது. அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்குக்கு மத்தியில், சிக்கலான புவிசாா் அரசியல் பரப்பில் கயிற்றில் நடப்பது போல மிகவும் நிதானமாக காய்களை நகா்த்த வேண்டியவராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இருக்கின்றது.
இரண்டு வருடங்களுக்கு முன்னா் உருவாகிய பொருளாதார நெருக்கடியின் பாதிப்புக் களிலிருந்து இலங்கை இன்னமும் மீளவில்லை. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா மட்டுமன்றி, சீனாவின் உதவியும் இலங்கைக்கு அவசியம். இதனை உணா்ந்துகொண்டவராகத்தான் ஜனாதிபதி அநுர காய்களை நகா்த்துகிறாா்.
தனது முதலாவது வெளிநாட்டுப் பயண மாக புதுடில்லி சென்ற ஜனாதிபதி, அடுத்த மாதம் சீனாவுக்கு செல்லவிருக்கின்றாா். பொருளாதார மீட்சிக்கு இந்த இரண்டு நாடுகளையும் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதுதான் அரசாங்கத்தின் பிரச்சினை. அந்த வகையில், ஜனாதிபதியின் புதுடில்லி விஜயத்தை வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். பொருளாதார ரீதியாக இலங்கைக்கு பயனுள்ள பல உடன்படிக்கைகள் எட்டப்பட்டுள்ளன.
இன நெருக்கடியைப் பொறுத்தவரையில், அதனையிட்டு நேரடியாகப் பேசுவதை மோடி தவிா்த்தாா். தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேறும் வகையில், இலங்கை அரசியல் அமைப்பு முழுமையாக செயல்படுத்தப்படும் என்று தன்னுடைய எதிர்பார்ப்பை இந்தியப் பிரதமா் மோடி இதன்போது தெரிவித்தார்.
13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக குறிப்பிடாமல், அதனை அமுல்படுத்தலுக்கான ஆதரவான கருத்துகளைதான் பொதுவாக தெரி வித்தார். 13 ஆவது திருத்தம் மட்டுமன்றி 16 ஆவது திருத்தமும் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் பின்னணியில் வந்ததுதான். அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்பது அவற்றை உள்ளடக்கியதுதான்.
இலங்கை அரசியல் சூழல் மற்றும் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்தபோதும், மோடி 13ஆம் திருத்தச்சட்டத்தை குறிப்பிட்டு பேசுவதை தவிா்த்மைக்கும் காரணம் இருக்கின்றது. 13 ஆவது திருத்தத்துக்கு எதிராக கடந்த காலங்களில் கடுமையாகப் போராடி ஜே.வி.பி.யின் தலைவா்தான் அநுரகுமார. அதனால், அதனைப் பற்றிப் பேசுவது அநுரவுக்கு சங்கடத்தைக் கொடுப்பதாக அமையலாம் என்று மோடி தரப்பு கணக்குப் போட்டிருக்கலாம்.
ஆனால், மோடி சொன்னவைகளைக் கேட்டுக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ள அநுர, அவற்றை நடைமுறைப்படுத்துவாரா, என்பது முதலாவது கேள்வி! அவா் நடை முறைப்படுத்தாமல் காலங்கடத்தினால் மோடியி னால் என்ன செய்ய முடியும் என்பது இரண்டாவது கேள்வி.